நாகேஷ் பேரன் அறிமுகமாகும் கல்கண்டு
ராட்டினம் படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்து தயாரிக்கும் படம், கல்கண்டு. இதில் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக டிம்பிள் சோப்டே நடிக்கிறார்.
மற்றும் மயில்சாமி, சாமிநாதன், முத்துராமன், டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.வி.சுரேஷ். கண்ணன் இசை. விவேகா, யுகபாரதி, அண்ணாமலை, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கி.வி.நந்தகுமார் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் மாற்றம் இருக்காது. அதே போல படமும் இருக்கும். படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்றார்.
நாகேஷ் பேரன் அறிமுகமாகும் கல்கண்டு
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment