அண்மைய செய்திகள்

recent
-

பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல்

பலஸ்­தீன - காஸா பிராந்­தி­யத்தில் இஸ்ரேல் சனிக்­கி­ழமை இரவு நடத்­திய உக்­கிர ஷெல் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 40 பேர் பலி­யா­ன­துடன் 400 பேருக்கும் அதி­க­மானோர் காய­ ம­டைந்­துள்­ளனர். இந்­நி­லையில் மேற்­படி ஷெல் தாக்­கு­தல்கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் தொடர்ந்­துள்ளன. இஸ்ரேல் ஞாயிற்­றுக்­கி­ழமை ஷியேயா பிர­தே­சத்­தி­லுள்ள சிரேஷ்ட ஹமாஸ் அதி­கா­ரி­யான காலில் அல்-­-ஹே­யாவின் வீட்டை இலக்கு வைத்து நடத்­திய ஷெல் தாக்­கு­தலில் அவ­ரது மகன், மரு­மகள் மற்றும் இரு சிறு­வர்கள் உட்­பட 4 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். 

 மேலும் அன்­றைய தினம் அந்தப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஷெல் தாக்­கு­தல்­களில் பலஸ்­தீன புகைப்­படக்கலைஞர் காலெத் ஹம்மாட் துணை மருத்­துவ உத்­தி­யோ­கத்தர் புவாத் ஜபார் ஆகியோர் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேற்­படி புகைப்­ப­டக்­க­லை­ஞரும் துணை மருத்­துவ உத்­தி­யோ­கத்­தரும் பய­ணித்த அம்­புலன்ஸ் வண்டி மீதே தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.அவர்கள் இரு­வரும் தாக்­கு­தல்­களில் காய­ம­ டைந்­த­வர்­களை மருத்­து­வ­ம­னைக்குச் கொண்டு செல்லும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டி­ருந்­த­தாக பிராந்­திய அவ­சர சேவைகள் பேச்சாளர் அஷ்ரப் அல்-­-கட்ரா தெரி­வித்­துள்ளார். 

 இந்­நி­லையில் கட்­டா­ருக்கு விஜயம் செய்ய­வுள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் ,பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்­பாஸை சந்­தித்து பிராந்­திய பதற்ற நிலை குறித்து கலந்­து­ ரை­யா­ட­வுள்ளார். இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கும் பலஸ்­தீ­னர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான வன்­முறை மோதல்­களை முடி­வுக்குக் கொண்டு வரும் முக­மாக அந்­தப்­பி­ராந்­தி­யத்­துக்­கான பய­ணத்தை பான் கீ மூன் மேற்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்­கி­றது. கடந்த 8 ஆம் திகதி ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கையை இஸ்ரேல் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இது­வரை 350க்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். 

கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரு­ம­ள­வானோர் பொது­மக்கள் என ஐக்­கிய நாடுகள் சபை தெரி­விக்­கி­றது. இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யா­னது கடந்த வியா­ழக்­கி­ழமை காஸா பிராந்­தி­யத்­துக்கு தரைவழி படை­யி­னரை முதன்­மு­த­லாக அனுப்­பி­யி­ருந்­தது.இந்­நி­லையில் ஹமாஸ் போரா­ளி­க­ளுக்கு எதி­ரான தரை வழித் தாக்­கு­தல்­களை விரி­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எல்லைப் பிராந்தியத்திலான சுரங்கங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைவீரர்களுக்குமிடையே சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் இரு இஸ்ரேலிய படைவீரர்கள் பலியானார்கள். 

 இந்­நி­லையில் காஸா­வி­லுள்ள பாட­சா­லை­களில் தஞ்­ச­ம­டைந்­துள்ள 50,000 க்கு மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் உதவி விநி­யோ­கங்கள் தொடர்பில் பற்­றாக்­கு­றையை எதிர்­கொண்­டுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை எச்­ச­ரித்­துள்­ளது. காஸாவின் எகிப்­திய மற்றும் இஸ்­ரே­லிய எல்­லை­க­ளுக்கு அருகில் பெரு­ம­ள­வான மக்கள் இடம்­பெ­யர்வு இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் அதி­காரி கூறினார். 

 இந்­நி­லையில் இஸ்ரேல் -- காஸா­வுக்கு இடையில் யுத்த நிறுத்­த­மொன்றை முன்­னெ­டுப்­ப­தற்­காக எகிப்து, கட்டார், பிரான்ஸ் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் முயற்­சிகள் முன்­னேற்­றத்தை எட்­டத் த­வ­றி யி­ருந்­தன. அதே­ச­மயம் இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹு­வுடன் சனிக்­கி­ழமை சந்­திப்பை மேற்­கொண்ட பிரான்ஸ் வெளி­நாட்டு அமைச்சர்,யுத்த நிறுத்­த­மொன்­றுக்கான இணக்­கப்பாட்டை எட்­டு­வ­தற்­கான தனது முயற்சி தோல்வியடைந்­துள்­ள­தாக கூறினார். கட்­டாரில் பலஸ்­தீன ஜனா­தி­பதி அப்­பா­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ள பான் கீ மூன் குவைத், எகிப்து, இஸ்ரேல் மற்றும் பலஸ்­தீ­னத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் உக்கிர ஷெல் தாக்குதல் Reviewed by NEWMANNAR on July 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.