மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு -படங்கள்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இலட்சக்கணக்கனோர் புடை சூழ கோலாகலமான முறையில் நடைபெற்றது.
இந்துக்களின் தாய்தந்தையை இழந்தவர்கள் மேற்கொள்ளும் பிதிர்க்கடன்களை தீர்க்கும் மிக முக்கிய தீர்த்த உற்சவமான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நடைபெற்றது.
ஆடி அமாவாசை தீர்த்த உற்சவத்தின் மிக முக்கிய பதியான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்த கேணியில் சிறப்பாக நடைபெற்றது.
தீர்த்தம்,தலம்,விருட்சம் ஆகியவற்றினை ஒருங்கேகொண்டு பன்னெடுங்காலமாக கிழக்கிலங்கையில் இந்த மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கிருகின்றது.
இராமாயண காலத்தில் இராமன் மற்றும் இராவணனால் வணங்கப்பட்ட ஆலயமாகவும் அனுமாரின் தீப்பிடித்த வாலினை அணைத்த ஆலயாகவும் இந்த ஆலயத்தின் வரலாறுகள் பறைசாற்றி நிற்கின்றன.
அற்புதங்கள் பல நிறைந்த மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10தினங்களாக சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.
நேற்று வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர் உற்சவம் சிற்பாக நடந்தது.
இன்று காலை விசேட பூசைகள் நடைபெற்று,விநாயகர், சிவன், பார்வதி அம்மை ஆகியோருக்கு ஒன்று சேர வசந்த மண்டபத்தில் விசேட அலங்கார உற்சவம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ரிஷப வாகனங்களில் மூவரும் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று அங்கு விசேட பூஜைகள் நடைத்தப்பட்டு தீர்த்தக்கேணியில் இலட்சக்கணக்கானோர் புடை சூழ தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றுது.
தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து தாய்தந்தையினை இழந்தோர் தீர்த்தக்கரையினில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்: இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:
No comments:
Post a Comment