அண்மைய செய்திகள்

recent
-

மரணதண்டனை விதிக்கப்பட்ட சூடானிய பெண் ரோமில் பாப்பரசருடன் சந்திப்பு

மதம் மாறி­ய­மைக்­காக மரணதண்­டனை விதிப்­புக்­குள்­ளாகி பின்னர் விடு­தலையான சூடா­னிய பெண்­ணான மரியம் யஹியா இப்­ராஹிம் இஷாக் பாப்­ப­ரசர் பிரான்­சிஸை சந்­தித்து ஆசீர்­வாதம் பெற்­றுள்ளார். சூடா­னி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தில் ஒரு மாத கால­மாக தஞ்­ம­டைந்­தி­ருந்த மரியம், தனது கண­வ­ருடனும் இரு பிள்­ளை­க­ளுடனும் இத்­தா­லிய ரோம் நகரை வந்­த­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 மரி­யத்தின் தந்தை முஸ்லிம் என்­பதால் இஸ்­லா­மிய சட்­டத்தின் பிர­காரம் மரி­யமும் முஸ்லிம் எனவும் அவர் மதம் மாற முடி­யாது எனவும் தெரி­வித்து அந்­நாட்டு நீதி­மன்­ற­மொன்று அவ­ருக்கு மரணதண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­தது. இந்த தீர்ப்­பா­னது உல­க­ளா­விய ரீதியில் கடும் கண்­ட­னத்தை தோற்­று­வித்­தி­ருந்­தது.இந்­நி­லையில் கிறிஸ்­தவ தாயாரால் வளர்க்­கப்­பட்ட தான், ஒரு­போதும் இஸ்­லா­மிய மதத்தை பின்­பற்­ற­வில்லை என மரியம் வாதிட்டார். தென் சூடானைச் சேர்ந்த கிறிஸ்­த­வ­ரான மரி­யத்தின் கணவர் இப்­ராஹிம் ஒரு அமெ­ரிக்கப் பிர­ஜை­யாவார். 

சர்­வ­தேச அழுத்தம் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் மரியம் விடு­தலை செய்­யப்­பட்ட போதும், அமெ­ரிக்கா செல்ல முயன்ற­ வேளை போலி பயண ஆவ­ணங்­களை வைத்­தி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்டு விமான நிலை­யத்தில் அவர் கைது செய்­யப்­பட்டார். தொடர்ந்து நாட்டை விட்டு வெளி­யேற முடி­யாத நிலையில் அவர் சூடா­னி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தில் தஞ்­ச­ம­டைந்தார். இந்­நி­லையில் கடந்த வாரம் மரி­யத்தின் தந்­தையின் குடும்­பத்­தினர், முஸ்லிம் பெண்­ணொ­ருவர் முஸ்­லி­மற்­ற­வரை திரு­மணம் செய்ய முடி­யாது என்ற வகையில் அவ­ரது திரு­ம­ணத்தை இரத்து செய்­வ­தற்கு வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தனர். 

 அதே­ச­மயம் சூடா­னி­லுள்ள ஹம்ஸா என்ற போரா­ளிக்­குழு மரி­யத்­தையும் அவ­ருக்கு உத­வு­ப­வர்கள் அனை­வ­ரையும் கொல்லப் போவ­தாக இரு நாட்­க­ளுக்கு முன் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து சூடானில் தொடர்ந்­தி­ருப்­பதன் அபா­யத்தை கருத்­திற்­கொண்டு அவ­ருக்கு நாட்டை விட்டு வெளி­யேற அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. மரி­யத்­து­ட­னான அரை மணிநேர சந்திப்பின் போது பாப்பரசர், அவர் விசுவாசத்துக்கு சாட்சியாக உள்ளமை தொடர்பில் அவருக்கு நன்றி தெரிவித்ததாக வத்திக்கான் பேச்சாளர் அருட்தந்தை பெடேறிகோ லொம்பார்டி தெரிவித்தார்.
மரணதண்டனை விதிக்கப்பட்ட சூடானிய பெண் ரோமில் பாப்பரசருடன் சந்திப்பு Reviewed by NEWMANNAR on July 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.