முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெடிச்சம்பவம்
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வெடிச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விடுதிகளுக்கு அருகே குப்பைக் கூளங்கள் எரிக்கப்பட்டபோது இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த வெடிச்சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
குப்பைக்குள் அல்லது நிலத்தின் கீழ் இருந்த ஏதேனும் வெடிப் பொருள் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெடிச்சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment