பிறந்த 3 நாளில் தானாக பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை-Photo
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று பிறந்த உடன் யாரின் உதவியின்றியும் போத்தல் மூலம் பால் குடிப்பது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த ஓனி(Onyi Chiedozie- Age 20)என்ற பெண் சில வாரங்களுக்கு முன்பு அமரா என்ற அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்த குழந்தை பிறந்த மூன்று நாட்களிலேயே போத்தலில் பால் குடிக்க கற்றுக் கொண்டுள்ளது.
அமராவின் கைகளில் போத்தல் கொடுத்தால் போதும், தனது தாயின் கைகளை தட்டிவிட்டு தானாகவே போத்தலை கைகளில் பிடித்து கொண்டு பால் குடிக்கிறது.
இதனை கண்ட மருத்துவர்களும், செவிலியர்களும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.
இதுகுறித்து அமராவின் தாயார் கூறுகையில், தான் இதை கண்டதும் அதிர்ச்சியடைந்ததாகவும், இதனால் இதனை தினமும் படம் பிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிறந்த 3 நாளில் தானாக பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை-Photo
Reviewed by NEWMANNAR
on
August 23, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 23, 2014
Rating:





No comments:
Post a Comment