அண்மைய செய்திகள்

recent
-

துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது இந்திய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.

இதுபோன்ற பெண்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கக் கூடாத என முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் இதுபோன்ற வழக்கு இதுவரை தொடரப்படாததால், இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில் தமிழ் படங்களில் கதாநாயகிகளாக நடித்து வரும் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் 18 வயது பூர்த்தியடையாதவர்கள்.

இவர்கள் கவர்ச்சியாகவும், முத்தக் காட்சியிலும் நடிக்க வைக்கப்படுகிறார்கள். பெண்களை தவறாக சித்தரிப்பதை தடை செய்யும் சட்டத்திற்கு கீழ், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் முத்துச்செல்வி கூறியுள்ளார்.

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இச்செய்தி அறிந்த திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது இந்திய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் Reviewed by NEWMANNAR on August 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.