ஓமானில் இலங்கை பணிப்பெண் துஷ்பிரயோகம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்
ஓமானில் இலங்கைப் பணிப்பெண்ணொருவர் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினர், விரைவில் ஓமானுக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறினார்.
இந்த பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்ததன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் தொழில் நிமிர்த்தம் ஓமானுக்குச் சென்றுள்ளார்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் பணியாற்றும் வீட்டின் உரிமையாளரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவரின் கணவரால் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழுள்ள பாதுகாப்பு நிலையத்திற்கு குறித்த பெண் அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சு தெரிவித்தது.
ஓமானில் இலங்கை பணிப்பெண் துஷ்பிரயோகம்; விசாரணைக்கு விசேட குழு நியமனம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment