மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை-10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகங்களில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.றோய் பீரிஸ் தலைமையிலான சுகாதார பரிசோதர்கள் குழு ஒன்று இன்று காலை(13) திடீர் என சென்று பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
மன்னார் பஸார் பகுதிகளில் உள்ள 15 இற்கும் மேற்பட்ட உணவகங்கள் இவ்வாறு திடீர் சோதனை செய்யப்பட்டது.
இதன் போது உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டதோடு பாவனைக்கு உதவாத மற்றும் சுகாதாரத்திற்கு முரணான வகையில் கையாளப்பட்ட உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டது.
இதன் போது சுகாதாரத்திற்கு முரணான வகையில் மற்றும் காலாவதியான உணவுப்பண்டங்களை வைத்திருந்த 10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குறித்த உணவுப்பொருட்களும் மீட்கப்பட்டது.
குறித்த 10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதோடு குறித்த சோதனைகள் தொடர்ச்சியாக இடம் பெறும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.றோய் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பஸார் பகுதியில் உள்ள உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை-10 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
No comments:
Post a Comment