அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் ஐவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 5 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம். இப்றாலெவ்வை தெரிவித்தார்.

 நேற்றிரவு கடையொன்றில் கோதுமை மா வாங்கி தோசை சுட்டுச் சாப்பிட்டதன் பின்பு காலையில் வாந்தியும் மாலையில் மயக்கமும் ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

 ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் எஸ். வினோத் (30) மனைவி அ. சிவலெட்சுமி (23) மகள் விநோதினி ( 04) ஆகியோர் ஆரம்ப சிகிக்சைப் பிரிவிலும் கா. கண்ணன் மற்றும் நா. தெய்வானை (55) ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமையால் ஐவர் வைத்தியசாலையில் Reviewed by NEWMANNAR on August 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.