அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாராபுரம் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம் தாயை காப்பாற்றிய மன்னார் பொலிஸார்.

மன்னார் தாராபுரம் கிராமத்தில் உள்ள தாய் ஒருவர் குடும்ப வண்முறையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ள போது அவரை மன்னார் பொலிஸார் நேற்று(15) திங்கட்கிழமை இரவு காப்பற்றியுள்ளனர்.

-இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,

-மன்னார் தாராபுரம் கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் சண்டை ஏற்பட்டதாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் மன்னார் பொலிஸார் உடனடியாக தாராபுரம் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் சென்ற போது குறித்த பெண் கிணற்றில் குறித்து தற்கொலைக்கு முயற்சி செய்த போது பொலிஸார் காப்பற்றியுள்ளனர்.மீண்டும் குறித்த பெண் கிணற்றினுள் குதித்துள்ளார்.

உடனடியாக அங்கு சென்ற மன்னார் பொலிஸார் குறித்த பெண்ணை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் தற்போது குறித்த பெண்ணை பாதுகாக்கும் பொருட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் தடுத்து வைத்துள்ளனர்.

-சுமார் 36 வயதுடைய குறித்த இளம் தாய்க்கு சிறு குழந்தை ஒன்றும் உள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.




-மன்னார் நிருபர்
(16-12-2014)

மன்னார் தாராபுரம் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளம் தாயை காப்பாற்றிய மன்னார் பொலிஸார். Reviewed by NEWMANNAR on December 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.