யாழில் சரஸ்வதி சிலை உடைப்பு
யாழ்ப்பாணம், வேலணை மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கல்வித் தெய்வமான சரஸ்வதி தேவியின் சிலை சமூக விரோதிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
சரஸ்வதிவதியின் சிலையை உடைத்தவர்கள் யார்? யாருடைய தூண்டுதலில் உடைக்கப்பட்டது? அரசியல் காரணங்கள் ஏதும் இருக்கின்றதா? என்பதைப் பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு சிலையை சேதப்படுத்திய விசமிகள் அடையாளம் காணப்பட வேண்டும் வேலணை தவிசாளர் சின்னையா சிவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் சரஸ்வதி சிலை உடைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment