அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி மரணம்.(Photo)

மன்னார் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை கடற்தொழிலுக்குச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் இன்று(12) திங்கட்கிழமை மாலை கடலில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

-மன்னார் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த யோகராசா கிஸாந்தன் (வயது-17) என்ற சிறுவன் நேற்று(11) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து சௌத்பார் கடற்பரப்பில் சிறிய ரக படகு(வள்ளம்) ஒன்றில் தனிமையாக மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியாகிய நிலையிலும் அவர் வீடு திரும்பாமை குறித்து குறித்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரை பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(12) காலை முதல் அப்பகுதி மீனவர்கள் கடலில் கடுமையான தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் குறித்த சிறுவன் தொழிலுக்கு கொண்டு சென்ற சிறிய ரக படகு(வள்ளம்)மற்றும் ,வலைத்தொகுதிகள் என்பன கடலில்  மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் தொடர்ச்சியாக மீனவர்கள் கடலில் தேடுதல்களை மேற்கொண்ட போது இன்று திங்கடக்pழமை மாலை 3 மணியளவில் குறித்த சிறுவர் கடலில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் கடலில் மூழ்கி மரணம்.(Photo) Reviewed by Admin on January 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.