அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று டேவிட் கெமரூனை சந்திக்கவுள்ளார்


பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து, இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் பொதுநலவாய தின விழாவில் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இரண்டாம் எலிசபெத் மகாராணி உட்பட அரச குடும்பத்தின் பிரதிநிதிகளும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதாக அவர் கூறினார்.

பிரித்தானிய பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர், பொது நலவாய அமைப்பின் பிரதிநிதிகளையும், பிரித்தானியா வாழ் இலங்கையர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்தார்.

விஜயத்தின் இறுதிநாளான நாளை, பெக்கிங்ஹம் மாளிகையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியார் வழங்கும் விசேட விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க மேலும் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று டேவிட் கெமரூனை சந்திக்கவுள்ளார் Reviewed by NEWMANNAR on March 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.