அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் இருந்து தலைமன்னார் பியர் வரை இன்று பரீட்சார்த்த புகையிரத சேவையை ஆரம்பித்து வைப்பு.-Photos



மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று(11) புதன் கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் மறுநாள் 14 ஆம் திகதி மடுவில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த நிலையிலே இன்று புதன் கிழமை(11) காலை 10.50 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்;க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரையில் பரீட்சார்த்த புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பரீட்சார்த்த புகையிரத சேவையினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எஸ்.தேசப்பிரிய,புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் அகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.









​​
மடுவில் இருந்து தலைமன்னார் பியர் வரை இன்று பரீட்சார்த்த புகையிரத சேவையை ஆரம்பித்து வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on March 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.