வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை(7) குஞ்சுக்குளம் கிராமத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பின் போது குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர் நோக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது மடு பிரதேச செயலாளர் .எப்.சீ.சத்திய சோதி, குஞ்சுக்குளம் பங்கு தந்தை, பாடசாலை அதிபர், கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்பை தொடர்ந்து குஞ்சுக்குளம் செல்லும் பிரதான பாதையில் உள்ள தொங்கு பாலம் அருகில் வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களால் வடமாகாண சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் 'சுற்றுலா உணவு விடுதியை' பார்வையிட்டதோடு அங்கு வெள்ளத்தால் சிதைவடைந்த தொங்குபாலத்தினையும் புனரமைப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்தனர்.
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 08, 2015
Rating:

No comments:
Post a Comment