மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கம்: படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி
ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையின் மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விரைவில் நீக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தடையை நீக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள வி.எம்.எஸ். உபகரணங்களை எதிர்வரும் மே மாதத்திற்குள் படகுகளில் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும், ஜனாதிபதியும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த உபகரணங்களை படகுகளில் பொருத்துவதற்கு அமைச்சினால் 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவீதம் படகு உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை கொடியுடன் சீன மீன்பிடி படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன்,
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விரைவில் நீக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கம்: படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி
Reviewed by NEWMANNAR
on
April 14, 2015
Rating:

No comments:
Post a Comment