சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் மீட்பு ஒருவர் கைது-Photos
மடுபிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவலயன்கட்டு பகுதியில் கடந்த திங்கள்கிழமை(18) வனவள திணைக்கள அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையில் அப்பகுதியிலுள்ள காட்டுபகுதியில் இருந்து பல இலட்சம் பெறுமதிவாய்ந்த மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த திங்கள்கிழமை (18) மடு வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சின்னவலயன்கட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனவள திணைக்கள அதிகாரிகளான ஏ.ஆர்.எம்.நியாஸ், சமிந்த விக்ரமசிங்க, டி.ஏ.கே.பி.தசிவ்வா ஆகியோர் குறித்த மரக்குற்றிகளை கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
ஜந்து மரங்கள் வெட்டப்பட்டு 12 துண்டுகளாக்கப்பட்ட நிலையில் குறித்த மரக்குற்றிகளை கடந்த திங்கள் மாலை மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைத்ததுடன் சந்தேக நபரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
வழக்கினை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜு சந்தேக நபரை எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் மீட்பு ஒருவர் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
May 25, 2015
Rating:
No comments:
Post a Comment