மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம் மன்னாரில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சட்டமா அதிபர் யுவஞ்ஜன விஜயதிலக்க தலமையில் இன்று(11) சனிக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
-மன்னார் சின்னக்கடை பகுதியில் ஒதுக்கப்பட்ட காணியில் குறித்த வாசஸ்தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை காலை சட்டமா அதிபர் யுவஞ்ஜன விஜயதிலக்க தலமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் பினிதினிய,மன்னார் நீதிமன்ற நீதவான் அலெக்ஸ் ராஜா ஆசிர்வாதம், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள்,மன்னார்,வவுனியா,யாழ்ப்பாண நீதிமன்ற அரச சட்டத்தரணிகள்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தளம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:
No comments:
Post a Comment