கிறிஸ்டியன் நோயல் அடிகளார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்---

திருகோணமலை மறைமாவட்ட ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதி வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல் அடிகளார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயராக திருநிலைப்படுத்தும் நிகழ்வு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வளாகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.
காலை 8.30 மணிக்கு திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்புனித நிகழ்வில் ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை ஆண்டகையால் அதி வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல் அடிகளார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏனையமறை மாவட்ட ஆயர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் பொதுமக்கள் என 6000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தின் முக்கியப்பிரமுகர்கள் பங்கேற்றதுடன் அரசியல் பிரமுகர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிறிஸ்டியன் நோயல் அடிகளார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்---
Reviewed by Author
on
July 25, 2015
Rating:

No comments:
Post a Comment