அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாடு மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு...


கடந்த ஜூன் மாதம் முதல் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த 40 மீனவர்கள் இன்று (10) நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 21ஆம் திகதி முதல் சிறை வைக்கப்பட்டு காவலில் இருந்த 26 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தாலும், கடந்த ஜூன் 01 முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட மீனவர்களுக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படாத நிலையில், சட்டதிட்டங்களை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடாதிருக்கும் வகையில் அவர்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்கள் என்பன விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு... Reviewed by Author on August 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.