அண்மைய செய்திகள்

recent
-

நான் கொலையாளியாம், பிரபாகரனை மிஸ்டராம்...


எனக்கு எதிராக சிலர் சேறுபூச முயற்சி செய்கின்றனர். பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்ற வகையில் சித்தரிக்கின்ற முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட போது எனக்கு முன்னைய ஆட்சியில் இருந்த தலைவர்கள் சமாதானத்திற்காக  பிரபாகரனிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்களையெல்லாம் பிரபாகரன் அடித்து விரட்டினார். பிரபாகரனை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். அதன் படி பிரபாகரனை வீழ்த்தினேன். ஆனால் தற்போது எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு என்மீது சேறுபூச முயற்சி செய்கின்றனர்.

நான் கொலையாளியாம், பிரபாகரனை மிஸ்டராம்... Reviewed by Author on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.