குழந்தையை நிலத்தில் அடித்து கொலை செய்த தாய் கைது
கரடியனாறு பொலிஸ் பிரிவில் இலுப்படிச்சேனை பகுதியில் தனது குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட கூணித்தீவு வீதி, இலுப்படிச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த குழந்தையின் தாய் அரியமலர் (வயது 40), குழந்தையின் பெரிய தாய் தவமலர் (வயது 44) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு குறித்த பெண் பரிசோதிக்கப்பட்டபோது அவர் குழந்தையொன்றைப் பிரசவித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
அது பற்றி மேலும் விசாரித்த வேளையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் அதனைப் புதைத்து விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இப்பெண்ணின் தடுமாற்றத்தில் சந்தேகம் கொண்ட வைத்தியர்கள் இது பற்றி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை கரடியனாறு பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பொழுது மேற்படி பெண்ணும் அவரது சகோதரியும் சேர்ந்து பிறந்த குழந்தையை நிலத்தில் அடித்துக் கொலை செய்து புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையை நிலத்தில் அடித்து கொலை செய்த தாய் கைது
Reviewed by Author
on
August 07, 2015
Rating:

No comments:
Post a Comment