அண்மைய செய்திகள்

recent
-

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும்: தேர்தல்கள் செயலகம்...


எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
மாலை தேர்தல் முடிந்தவுடன் முதலில் தபால்மூல வாக்கு முடிவுகளே வெளியிடப்படவுள்ளன.

அதனையடுத்து, தொகுதிவாரியாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

இதன்படி, இம்முறை தேர்தலின் முதலாவது தபால்மூல வாக்கு முடிவை இரவு 11 மணி முதல் நள்ளிரவுக்குள் வெளியிட முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

தொகுதி வாரியான தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்திற்கு மறுநாள் அதிகாலை முதல் வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டள்ளது.

இத் தேர்தலில் 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 35 அரசியல் கட்சிகள், 201 சுயேட்சைக்குழுக்கள் ஆகியவற்றை சேர்ந்த 6151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும்: தேர்தல்கள் செயலகம்... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.