அண்மைய செய்திகள்

recent
-

அசாமில் பெருவெள்ளம் : 2000 கிராமங்கள் நீரில் மூழ்கின : 50 பேர் பலி...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.



நேற்று முன்தினம் ஒரேநாளில் மாதத்திரம் 4 பேர் உயிரிழந்தனர்.

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை பெய்து வருகின்றது. இதனால் பிரம்மபுத்திரா ஆறு வௌ்ளத்தினால் கரைபுரண்டு ஓடுவதால் 6 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருவெள்ளத்தினால் 2000 கிராமங்கள் முற்றிலுமாக நீர் சூழ்ந்துள்ளது. இதனால் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.26 இலட்சம் மக்கள் பேரிடர் நிவார முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அசாம் அரசு 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுவியுள்ளது.

இதேவேளை பார்பேட்டா மாவட்டத்தில் உள்ள நகுச்சிபதர் கிராமம் பெருவெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை முக்கிய தொழிலாக கொண்ட அசாமின் கிராமப்புறங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் , மழை வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




   
அசாமில் பெருவெள்ளம் : 2000 கிராமங்கள் நீரில் மூழ்கின : 50 பேர் பலி... Reviewed by Author on September 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.