அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு மரதன் ஓட்டப் போட்டி இன்று 6600க்கும் அதிகமானோர் பங்கேற்பு...



15ஆவது தட­வை­யா­கவும் நடத்­தப்­படும் எல்.எஸ்.ஆர். கொழும்பு மரதன் ஓட்­டப்­போட்டி இன்று காலை 6 மணிக்கு ஆரம்­ப­மாகும். உள்­நாட்டில் மட்­டு­மல்­லாமல் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் மொத்­த­மாக 6600 இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் இதில் பங்­கு­கொள்­கின்­றனர்.

கொழும்­பி­லுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைச்­சுக்கு அருகில் ஆரம்­ப­மாகும் இந்த 'கொழும்பு மரதன்' ஓட்டப் போட்­டி­யா­னது பொரளை, தெமட்­ட­கொடை, வத்­தளை வழி­ யாக ஹமில்டன் வாவி பாதை­யூ­டாக பமு­னு­கம, தலா­ஹேன, பிட்­டி­பத்த ஊடாக நீர்­கொ­ழும்பு கடற்­கரை மைதா­னத்தில் நிறை­வ­டையும்.

இதன் பிர­தான பிரி­வான திறந்த மரதன் ஓட்டப் போட்­டியில் முத­லிடம் பெறு­ப­வ­ருக்கு 2500 அமெ­ரிக்க டொலர்­களும் (345, 000 இலங்கை ரூபா) விமானப் பயணச் சீட்­டொன்றும் வழங்­கப்­படும்.

இரண்­டா­மிடம் பெறு­ப­வ­ருக்கு 1500 அமெ­ரிக்க டொலர்­களும், மூன்­றா­மிடம் பெறு­ப­வ­ருக்கு 1000 அமெ­ரிக்க டொலர்­களும் பரி­சாக வழங்­கப்­படும். மேலும், 4ஆம், 5ஆம் இடங்­களைப் பெறு­ப­வர்­க­ளுக்கு முறையே 500, 200 அமெ­ரிக்க டொலர்­களும் வழங்­கப்­படும்.

இந்த மரதன் ஓட்டப் போட்­டிக்கு சீனா­வி­லி­ருந்து 28 பேரும், இந்­தி­யா­வி­லி­ருந்து 20 பேரும், கென்­யா­வி­லி­ருந்து 17 பேரும், மாலைதீ­வி­லி­ருந்து 8 பேரும் பங்­கேற்­கின்­ றனர்.
இது­த­விர, ஐக்­கிய இராச்­சியம், பாகிஸ்தான், கனடா, ஐக்­கிய அமெ­ரிக்கா, எத்­தி­யோப்­பியா, ஜேர்­மனி, நியூ­ஸி­லாந்து உள்­ளிட்ட 39 நாடு­க­ளி­லி­ருந்து வீர வீராங்­க­னைகள் பங்­கேற்­கின்­றமை விஷேட அம்சமாகும்.

இப் போட்டியின் பரிசளிப்பு விழா நாளை திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு கடற்கரை மைதானத்தில் நடை பெறும்.

கொழும்பு மரதன் ஓட்டப் போட்டி இன்று 6600க்கும் அதிகமானோர் பங்கேற்பு... Reviewed by Author on October 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.