அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு-Photos


மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் அவரது தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா உட்பட்டோர் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



மண்ணில் தமிழன் உள்ளவரை மாவீரர் நினைவு மறையாது கண்ணில் காணா தெய்வங்களை கார்த்திகை 27ல் வழிபடுவோம் என்னும் தொனிப் பொருளில் நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து உயிரை தியாகம் செய்த மாணவன் இ.செந்தூரனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.





மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு-Photos Reviewed by NEWMANNAR on November 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.