செந்தூரனின் கடிதம் தொடர்பில் எந்த சந்தேகமும் கிடையாது - பொலிஸார் உறுதி.
யாழ். கோப்பாய் மாணவன் செந்தூரனின் கடிதம் தொடர்பில் எந்தவித சந்தேகமும் கிடையாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
செந்தூரன் தற்கொலை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த விடயம் உறுதி் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸ் முன்னெடுத்து வருகின்ற நிலையில், இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, செந்தூரனின் தற்கொலையின் போது அவருடன் எவரும் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
செந்தூரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் அவருடன் ஒருவர் இருந்துள்ளதாக வெளியான தகவல்களின் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை மையப்படுத்தி சிலர் அரசியல் இலாபத்தை தேடிக் கொள்ள முயற்சிக்கின்ற நிலையிலேயே இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
எவ்வாராயினும் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
செந்தூரனின் கடிதம் தொடர்பில் எந்த சந்தேகமும் கிடையாது - பொலிஸார் உறுதி.
Reviewed by NEWMANNAR
on
November 28, 2015
Rating:

No comments:
Post a Comment