அண்மைய செய்திகள்

recent
-

புலமைப்பரிசில் பரீட்சையிலும் சாதாரண தரப்பரீட்சையிலும் மாற்றம்: கல்வி அமைச்சர்


இலங்கையில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீரூடைகளுக்காக வவுச்சர்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றபோதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஜனவரியில் புதிய கல்விமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையும் சாதாரண தரப்பரீட்சையும் மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனவே பெற்றோருக்கும் மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தாதவண்ணம் இந்த இரண்டு பரீட்சைகளையும் திட்டமிட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

எனினும் கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டியிருப்பதால் தற்போதைக்கு எதுவும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று காரியவசம் குறிப்பிட்டுள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சையிலும் சாதாரண தரப்பரீட்சையிலும் மாற்றம்: கல்வி அமைச்சர் Reviewed by NEWMANNAR on November 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.