பபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 28 பேருக்கு பிணை. .
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 28 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமனறத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு 10 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்திளார் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு கட்டமாக 63 பேரை விடுதலை செய்வதாக தீர்மானிக்கப்பட்டு இன்று காலை 31 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சட்டமபா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கவில்லை என அரச சட்டத்தரணிகள் தெரிவித்ததை அடுத்து இந்த மாதம் 24ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 28 பேருக்கு பிணை. .
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:


No comments:
Post a Comment