அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற மாபெரும் கரோல் பாடல் போட்டி.Photos

மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையமான 'கலையருவி' அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புனித 'செசிலியா' விருதுக்கான மாபெரும் கரோல் பாடல் போட்டியின் இறுதிப் போட்டியும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை    மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

கலையருவி அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற குறித்த  இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார், சிறப்பு விருந்தினர்களாக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. எஸ். மாக்கஸ்,டிலாசால் ஆங்கில மொழிப் பாடசாலை அதிபர் அருட்சகோதரர் கே. எஸ். யோகநாதன், லூயி முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி றீற்றா குணநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நான்கு பிரிவுகளாக நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் பல்வேறு பங்குகளைச் சார்ந்த 38 பாடகர் குழுக்கள் பங்கேற்றிருந்தன.

 ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நான்கு குழுக்கள்வீதம் 16 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற குழுக்களுக்கு புனித செசிலியா விருது வழங்கப்பட்டது..தன் போது பல்வேறு கரோல் பாடல்களும் அரங்கேற்றப்பட்டது.

 மன்னார் மாவட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் பிரமாண்டமான கரோல் பாடல் போட்டியாக இப்போட்டி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 (மன்னார் நிருபர்)
(19-12-2015)














மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற மாபெரும் கரோல் பாடல் போட்டி.Photos Reviewed by NEWMANNAR on December 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.