அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையினால் 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் ...



மன்னார் நகர சபையினால் 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பு....
கடந்த 2015 மார்கழி மாதம் கேள்வி கோரல் முறையில் வழங்கப்பட்ட பண்டிகைக் கால கடைகளால் கிடைக்கப்பெற்ற 05 மில்லியன் (50இலட்சம் ரூபாவில்) 02 மில்லியன்(20இலட்சம்) பாதீட்டில் உள்ளடங்கப்பட்ட வேலைகளும் எஞ்சிய ரூபா 03மில்லியன் (30 இலட்சம்) மேலதிக வருமானத்தினை குறை நிரப்பு வரவு செலவு திட்டம் மூலம் 15 கிராம சேவகர் பிரிவிற்கும் தலா 2 இலட்சம் வீதம் அந்தந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கு உதவும் வகையில் வீதி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு சபையினால் உத்தேசிக்கப்பட்டதன் அடிப்படையில் மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் ஆலோசனைகளை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது அமைப்புகளுக்கிடையேயான மக்கள் தேவைகள் குறித்த கலந்துரையாடலானது.
 07.01.2016 ஆம் திகதி வியாழக்கிழமை காலை மு.ப.10.00 மணியளவில் நகரசபையின் செயலாளர் தலைமையில்  மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் பொருட்டு மன்னார் நகரசபையின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்  15 கிராம சேவகர் பிரிவுகளையும் சார்ந்த கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்ää சன சமூக நிலையங்கள்  கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் போன்ற சமூக மட்ட அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு  அழைப்பின் பிரகாரம் மன்னார் நகரத்தின் அபிவிருத்தியில் அக்கறைகொண்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முதலில் நகரசபையின் செயலாளரினால் சபையின் நிகழ்காலää எதிர்கால செயற்திட்டங்களுடன் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கம் பற்றியும் விபரிக்கப்பட்டதுடன் கிடைக்கப்பெற்ற வருமானத்தில் மேற்கொள்ள வேண்டிய பொது மக்களின் தேவைகளை முன்வைக்குமாறும் அவரினால் கோரப்பட்டது. இதற்கிணங்க பல வகை கிராமங்களையும் சேர்ந்த மக்களினால் பலதரப்பட்ட தேவைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவையாவும் பொதுவாக நகர பிரதேசத்தின் பொதுத் தேவைகளாகவே காணப்பட்டன. இந்த வகையில் விளையாட்டு மைதான புணரமைப்பு  நகரத்திற்கான மணிக்கூட்டுக் கோபுரம் வடிகாலமைப்பு மற்றும்  வைத்திய சாலையும் -தலைமன்னார் வீதியும் இணையும் இடத்தில் சுற்றுவட்டம்  வீதி அமைப்பு வீதி விளக்கு பொருத்துதல் என்றவாறான தேவைகள் எடுத்தியம்பப்பட்டன.
அத்துடன் ஈட்டப்பட்ட நிதியினை சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பிரித்துக்கொடுத்து அந்தந்த பிரதேச வீதிகளை அமைப்போமாயின் அது போதியதன்று. ஏனெனில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவும் பல கிராமங்களையும்  கிராமங்களின் தேவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் இடம்பெறவுள்ள வேலைத்திட்டங்களின் வெளியீடு சிறப்புற அமையப்பெறாது பூரணமற்றுக்காணப்படும்; ஆதலால் ஒட்டுமொத்தமாக இந்நிதியினை நகரின் பொதுத்தேவைக்கு செலவிடுவோமாயின் அது நகர அபிவிருத்திக்கு அத்திவாரமாகவும் பூரணத்துவம் வாய்ந்ததாகவும் அமையும் என்ற ஏகோபித்த அபிப்பிராயத்தின் பிரகாரம் சீரற்ற வகையில் காணப்படுகின்ற மன்னார்  பொது விளையாட்டரங்கு முதலில் புணரமைக்கப்படவும் நிதி மீதி காணப்படுமாயின் மன்னார் நகர பகுதியை அடையாளப்படுத்தும் வகையில் நகரின் மத்தியில் மணிக் கூட்டுக் கோபுரம் அமைக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுடன். இச் செயற் திட்டங்களை நகர சபையுடன் இணைந்த வகையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக 07 உறுப்பினர்களைக்கொண்ட செயற்திட்ட குழுவொன்றும் கலந்துகொண்டோர் மத்தியில் தெரிவுசெய்யப்பட்டு நிறுவப்பட்டது.

அத்துடன் தொடர்ந்து செயலாளர் கூறுகையில்  உரையாடலின் இறுதிக்கட்ட தீர்மானங்களாக முன்மொழியப்பட்ட ஏனைய தேவைகள் குறிப்பாக வீதியமைப்பு  தெரு விளக்கு போன்ற தேவைகளை எதிர்காலத்தில் கிடைக்கப்பெறவுள்ள நிதி மூலங்கள் மூலமும் 2016 ஆம் ஆண்டின் சபையின் பாதீட்டுக்கமையவும் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுத்துச்செல்லப்படும் எனவும் கூறிக்கொண்டதுடன் எமது சுற்றுச் சூழலின் சமநிலையினை பேணும் வகையில் திண்மக் கழிவுகளினை மீள்சுழற்சி செய்யும் எமது திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு பொது மக்களினால் அகற்றப்படும் கழிவுகளை உக்கக் கூடிய கழிவுப் பொருட்கள்  உக்காத கழிவுப் பொருட்கள் என வெவ்வேறாக தரம்பிரித்து வழங்குமாறும் அதற்காக  எம்மிடம் காணப்படும்.
Plastic Color Bins பெற விரும்புபவர்கள் அலுவலக நடைமுறைக்கேற்ப எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்...

புதுவருடத்தில் இருந்து அபிவிருத்திகள் ஆரம்பமாகியுள்ளது….





மன்னார் நகர சபையினால் 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் ... Reviewed by Author on January 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.