இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர்...

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும் மேலும் மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்ட 468 ஏக்கர் நிலப்பகுதியில் வறுத்தலை விளான், தையிட்டி, பளை வீமன்காமம் வடக்கு, தெற்கு பகுதிகளை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது மீள்குடியேறியுள்ள தமக்கான வீட்டு திட்டம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மக்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண சபைக்குரிய வீதிகள் மற்றும் காணி பிணக்குகள், வீட்டுத்திட்டம், வைத்திய வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை பெற்றுக்கொடுக்குமாறு பிரதேச செயலர் சிவமோகனன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர்...
Reviewed by Author
on
January 07, 2016
Rating:
Reviewed by Author
on
January 07, 2016
Rating:






No comments:
Post a Comment