அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை.-Photos


இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரையும் மன்னார் நீதி மன்றம் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்துள்ளது.

குறித்த 4 மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற நிலையிலே குறித்த தமிழக மீனவர்கள் 4 பேரையும் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார்.

குறித்த மீனவர்கள் 4 பேரூம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்களை இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதே வேளை தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 15 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த மீனவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.




தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை.-Photos Reviewed by NEWMANNAR on January 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.