அண்மைய செய்திகள்

recent
-

2700 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்வு: பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை

2700 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்வு: பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை
கடந்த 2700 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்பமயமாதலின் விளைவே இதற்குக் காரணம் எனவும், இந்நிலை தொடர்ந்தால் கடலோரப் பகுதிகள் பல நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதேசமயம், பூமியில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்போது கடல் மட்டம் 1000 முதல் 1400 அங்குலம் வரை குறைகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடல் மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புவி அறிவியல் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றும் ரொபர்ட் கூப், கார்லிங் ஹே, எரி மாரோ மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்ரி மிட்ரோவிகா ஆகியோர் சமீபத்தில் அவர்களின் ஆய்வை சமர்ப்பித்திருந்தனர்.

அந்த ஆய்வில் கடந்த 2700 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குறிப்பாக, 1900 முதல் 2000 ஆண்டு வரை 14 செ.மீ, அளவுக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் இதற்கு மனிதர்களால் ஏற்படும் உலக வெப்பமயமாதலே காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியே சென்றால், அது பேரழிவில் முடியும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2700 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடல் நீர் மட்டம் உயர்வு: பேரழிவு ஏற்படும் என எச்சரிக்கை Reviewed by NEWMANNAR on February 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.