செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் பணிகள் விரைவில் தொடங்கும்: விஞ்ஞானி தகவல்...
இந்தியா சார்பில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதற்கான முதல்கட்டப் பணிகளை இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தொடங்க உள்ளனர் என "நாசா” விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்த அறிவியல் கருத்தரங்கில் "நாசா” விஞ்ஞானி அந்தோணி ஜீவராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பி மீண்டும் பூமிக்கு கொண்டு வர வேண்டிய ஆராய்ச்சிகளை "நாசா' செய்து வருகிறது.
2017ம் ஆண்டில் ராக்கெட்டுகளை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சோதனை மேற்கொள்ளப்படும்.
அதைத் தொடர்ந்து, 2035ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் பணிகள் நடைபெறும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையினர் பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அனுப்பி வருகின்றனர்.
செவ்வாய்க் கிரகத்துக்கும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி உள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளன.
மேலும், இந்தியா சார்பிலும் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவதற்கான முதல்கட்டப் பணிகளை இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தொடங்க உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் பணிகள் விரைவில் தொடங்கும்: விஞ்ஞானி தகவல்...
Reviewed by Author
on
February 21, 2016
Rating:

No comments:
Post a Comment