அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பினோம்! ஏற்றுக்கொண்டது அவுஸ்ரேலியா...


இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அண்மையில் வந்த அகதி படகு ஒன்றை தமது கரையோரப்படையினர் திருப்பியனுப்பியமையை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டட்டன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளுடன் சிறந்த உறவை கொண்டிருக்கும் நாடு என்ற வகையில் அவுஸ்திரேலியா, குறித்த அகதிகள் என்று கூறப்பட்டோரை திருப்பியனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன் 4பிசி வானொலியிடம் இந்த விடயத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருவதற்காக சுமார் 14ஆயிரம் பேர்
இந்தோனேசியாவில் காத்திருப்பதாக டட்டன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பினோம்! ஏற்றுக்கொண்டது அவுஸ்ரேலியா... Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.