அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தந்தை செல்வாவின் 118 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு(படங்கள் இணைப்பு)

ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 118 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறங்காவலர் அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னபாக உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு முன் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.

-குறித்த நிகழ்வில் மன்னார் நகரசபையின் முன்னாள் உறுப்பினரும்,ஈபி.ஆர்.எல்.எப் அமைப்பின் முக்கியஸ்தருமான இ.குமரேஸ்,மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இதன் போது சிறப்பு உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.



மன்னார் நிருபர்

(31-03-2016)







மன்னாரில் தந்தை செல்வாவின் 118 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on March 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.