அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் போக நெற்பயிர்ச் செய்கையில் 'சந்தன கோரை'யின் தாக்கம் அதிகம்-விவசாயிகள் கவலை.-படம் இணைப்பு


மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் கோரையின் தாக்கம் அதிகலவு காணப்படுவதாகவும்,இதனால் நெற்பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக கோரையின் தாக்கம் காணாப்பட்டுள்ள போதும்,தற்போது கோரையின் தாக்கம் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோரை என அழைக்கப்படும் கலை பல வகையாக காணப்படுகின்ற போதும் 'சந்தன கோரை' அதிகலவில் காணப்படுகின்றது.

இதனால் நெற்பயிர்ச்செய்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தன கோரையினை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் பல்வேறு வகையான கலை நாசினிகளை பயன்படுத்தியும் குறித்த சந்தன கோரையினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ச'ந்தன கோரை' நெற்பயிர்ச்செய்கையின் வளர்ச்சியை தடுத்துள்ளதோடு,நெற்பயிர்ச் செய்கைக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விவசாயிகள் அறுவடையினை மேற்கொள்ள உள்ள நிலையில் குறித்த தாக்கம் பெறும் பாதீப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் போக நெற்பயிர்ச் செய்கையில் 'சந்தன கோரை'யின் தாக்கம் அதிகம்-விவசாயிகள் கவலை.-படம் இணைப்பு Reviewed by NEWMANNAR on March 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.