தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தாபக தலைவர் தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தைசெல்வாவின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தாயகம் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம். தந்தை செல்வா அறக்கட்டளையின் வவுனியா தலைவர் வரதராஜன் உட்பட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள தந்தைசெல்வாவின் சிலைக்கருகில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தாயகம் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதில் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம். தந்தை செல்வா அறக்கட்டளையின் வவுனியா தலைவர் வரதராஜன் உட்பட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தந்தை செல்வாவின் 39 ஆவது சிரார்த்த தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment