அடக்கப்பட்ட ஏகாதிபத்திய உரிமைகளுக்காக அணிதிரள்வோம்.மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், மகளீர் அமைப்புக்கள், ஆகியவை ஒன்றிணைந்து தொழிலாளர் தினமான ஞாயிற்றுக்கிழமை(1) மன்னார் நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெறவுள்ள மாபெரும் பொதுக் கூட்டம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இதன் போது சிறப்பு வருகையாளர்களின் எழுச்சியுரைகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரையும் தொழிலுறவு உரிமையுடன் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அடக்கப்பட்ட ஏகாதிபத்திய உரிமைகளுக்காக அணிதிரள்வோம்.மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன்.
Reviewed by NEWMANNAR
on
April 29, 2016
Rating:

No comments:
Post a Comment