அண்மைய செய்திகள்

recent
-

பெரியபுலத்துச்சேனை பொற்கேணி பண்டாரவெளி வீதியின் புனரமைப்புப் பணிகள் ரூபாய் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ....


பெரியபுலத்துச்சேனை பொற்கேணி பண்டாரவெளி வீதியின் புனரமைப்புப் பணிகள் ரூபாய் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்...

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட, முசலி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, பெரியபுலத்துச்சேனை பொற்கேணி பண்டாரவெளி வீதியினை   மாகாண சபையின் உறுப்பினர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கவும் அப்பகுதி மக்களது நலனைக் கருத்தில் கொண்டும் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா 6 மில்லியன் ஒதுக்கீட்டில், மாகாண சபை உறுப்பினர்கள் ரிப்கான் பதியுதீன், அயூப் அஸ்மின் ஆகியோரது  தெரிவின் அடிப்படையில் இவ்வீதியின் வேலைத்திட்டத்தை 29-04-2016 வெள்ளி காலை 11.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

நிகழ்விற்கு பண்டாரவெளி பள்ளிவாசல் மௌலவி, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.துசியந், மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.










பெரியபுலத்துச்சேனை பொற்கேணி பண்டாரவெளி வீதியின் புனரமைப்புப் பணிகள் ரூபாய் 11 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் .... Reviewed by Author on May 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.