பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது! (முதலமைச்சருக்கு ஆளுநர் பதில்)
பிரபாகரன் போன்று ஒருவர் இனிமேல் தலைதூக்கவே முடியாது என தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே,உலகம் நெருப்பால் மூடப்படும் அல்லது இந்த ஆண்டுடன் உலகம் அழியும் என்ற சிலரின் கற்பனை எதிர் கூறலைப் போன்றே வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தும் உள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற சந்திப்பில் கலந்து கொண் டிருந்தபோதே வடமாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் வாதிகளுக்கு மீண்டும் யுத்தம் ஒன்று தேவைப்படுகின்றது.
தமது அரசியல் கொள்கைகள் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்றால், அதில் அவர்கள் குளிர்காய வேண்டும் என்றால் அவர்களுக்கு குழப்பம் அவசியமாகின்றது. அதனால்தான் பிரபாகரன் மீண்டும் வருவார், நாட்டை பிரித்ததுத் தருவார் என்ற கற்பனைக் கதைகளை எல்லாம் கூறுகின்றனர்.
அவ்வாறான ஒரு கற்பனை எதிர்வுகூறலைப் போன்றதே வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தும் உள்ளது என ஆளுநர் குறிப்பிட்டார்.
பிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது! (முதலமைச்சருக்கு ஆளுநர் பதில்)
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment