அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்?


பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

வவுனியா, உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத் தெரிவு தொடர்பில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இம் மையத்தை தாண்டிக்குள விவசாய பண்ணைக் காணியில் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துமே மேற்படி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த விவசாய பண்ணை காணி வடமாகாண விவசாய அமைச்சுக்கு கீழ் வருவதால் அதனை வழங்க முடியாது எனவும், ஓமந்தையில் இவ் மையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த சில மக்கள் பிரதிநிதிகளும் கோரி வரும் நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

இது இவ்வாறு இருக்க, கடந்த 29 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சரை சந்தித்த வடக்கு முதலமைச்சர் இது தொடர்பான இறுதி முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இடம்பெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டம் முதலமைச்சருக்கு எதிரானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்? Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.