அண்மைய செய்திகள்

recent
-

ஆயிரக்கணக்கில் குழந்தைகள் நரபலி: ’நடுச்சாம பயங்கர குகை’ மர்மம்....


Belize-ல் உள்ள ’நடுச்சாம பயங்கர குகை(Midnight Terror Cave)’ என அழைக்கப்படும் அதனுள் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு குவியல்கள் மற்றும் பலி பீட அடையாளங்கள் உலகை அதிர வைத்துள்ளது.

மத்திய அமெரிக்காவின் மேற்கு நாடான பெலிஸில் காயோ மாவட்டத்தில், தலைநகர் பெல்மோபனுக்கு தெற்கேயும், ஸ்ப்ரிங்பீல்ட் சமூகத்தினர் வாழும் மெனோனைட் பகுதிக்கு அருகாமையிலும் இந்த குகை அமைந்துள்ளது.

இந்த குகை 2006 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயங்கரமான பெயரும் அதற்கு அப்போது தான் கிடைத்தது.

குகை கண்டுபிடிப்பு

2006 டிசம்பரில் ஆயுதம் ஏந்திய கொள்ளையன் இந்த குகைக்குள் விழுந்துவிட்டான். அவனைக் காப்பாற்ற முயன்றால் தானும் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்த இன்னொரு கொள்ளையன் வெளியில் வந்து கூக்குரலிட்டான்.

அருகில் உள்ள மேனோனைட் விவசாயிகள் காப்பாற்ற வந்துபோது, ஒரு கொள்ளையன் 18 மீட்டர் குகையின் ஆழம் என்றான் இன்னொருவன் அதில் பாதி அல்லது கொஞ்சம் அதிகம் என்றான்.

இருவரையும் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு, குகை உள்ளே பார்த்த போது, அங்கு சிதறிக்கிடந்த ஏராளமான மனித எலும்புகள் அவர்களை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ஒருவழியாக குகையும் வெளியுலக வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த குகை நிழல் உலக மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்திருப்பது அப்போது தான் தெரிந்தது. மக்களால் கண்டுகொள்ளப்படாமல், இக்குகை சமூக விரோதிகளின் கூடாரமாகவே ஒருகால கட்டத்தில் செயல்பட்டுள்ளது.


குகையா? கொலைக்களமா?

மூடநம்பிக்கை மற்றும் கற்பனை ஆன்மீக கண்டுபிடிப்புகளான அதீத மாய சக்திகளை பெறுவதற்காக இளம்பிள்ளைகளை இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற செயல்கள் இங்கே அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித எலும்புகள், மண்டை ஓடுகள், பற்கள், இதயம், ரத்தம் என வெட்டி பிரித்து பலிகொடுக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகிறது. குகைக்குள் அதற்கான வெவ்வேறு இடங்களில் பலி பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி பலிகொடுக்க பயன்படுத்தப்பட்ட குழந்தைகள், இந்த குகை இருக்கும் பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்கள் அல்ல, எலும்புகளின் ஆய்வில் பல நூறுமைல்களுக்கு அப்பால் இருந்து அவர்கள் கடத்தப்பட்டு வந்திருப்பது தெரிகிறது.

அமானுஷ்ய சக்திகளை பெறுவதற்கோ, நல்வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை போன்ற வேறு காரணங்களுக்காகவோ நடுஇரவில் இந்த குகையில் பரிதாபகரமான பலியிடு சம்பவங்கள் நடந்திருக்கலாம்.

இங்கு இறந்து கிடக்கும் மனிதர்களின் எலும்புகள் 6 வயதிலிருந்து 14 வயது வரையுள்ள சிறுவர்களுடையது.

இந்த குழந்தைகள் ஒட்டு மொத்தமாக கடத்தப்படுவதற்கு பெரிய கும்பலின் ’நெட்வொர்க்’ செயல்பட்டிருக்கிறது.

மூன்று ஆண்டுகளாக இந்த குகை பற்றி கலிபோர்னியா மாநில கல்லூரி நடத்திய சர்வே 2010 ல் முடிவடைந்தது.



ஆய்வாளர்களின் ஒத்த கருத்து

குகையில் கிடந்த பற்கள், எலும்புகள் உட்பட்ட மனித எச்சங்களை ஆய்வுசெய்த குழுவில் வல்லுனரான மாணவி சமந்தா லாரன்ஸ் கலெக்டர்ஸ் வார இதழுக்கு கூறும் போது,’ ஆய்வில் ஒருவர் கூட பெலிஸுக்கு உரியவர் இல்லை. குகையில் பலியிடப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே பிராந்தியத்திலிருந்தே கடத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும், உறுப்புகள் ஒரே மாதிரியாக துண்டிக்கப்பட்டிருப்பது. ஏதோ ஒரு நோக்கத்திற்காக கடவுளுக்கு படைப்பதாக பலியிட்டிருக்கலாம். இதற்கு பின்னால் பெரியகும்பல் திட்டமிட்டு வேலை செய்து மொத்தமாக கடத்தி வந்திருக்கலாம்’ எனகூறுகிறார்.

கலிபோர்னிய மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் ஜேம்ஸ் ப்ரடியும் குழந்தைகள் கடத்தி வரப்பட்டு பலியிடப்பட்டுள்ளது என கூறுகிறார்.



ஆய்வின் உறுதிகள்

10,000 க்கு மேற்பட்ட எலும்புகள் உள்ளன. அதற்கு மும்மடங்காக பேட்டரி பாகங்களும் கிடக்கின்றன.

பலியிட்டிருப்பது ஒரு சடங்கு முறையோடு, பலகட்ட தொடராகவும் நடந்துள்ளது. சடங்கின் இறுதிப் பகுதியாக 'V' வடிவ குகை தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 114 உடல்கள் 14 வயதுடையவர்கள். கரிம தேதியிடல் ஆய்வுப்படி 1,500 லிருந்து 3000 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு உரிய எச்சங்கள் இவை. இது மாயா நாகரீக காலம்என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ’நடுச்சாம பயங்கர குகை’ மாயா நாகரீக மக்களோடு தொடர்புடையது. இதன் மூலம், மாயா மக்களின் பழக்க வழக்கங்கள் கலாசாரத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

தோன்றும் கேள்விகள்

இத்தனை குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் பலவந்தமாக கடத்திவரப்பட்டு பலிகொடுக்க காரணம் என்ன?

இது போன்ற வழக்கம் இரும்பு காலத்தில் பிரிட்டனில் இருந்துள்ளது.

பல்கேரியாவில் 2700 களில் சில பகுதிகளில் இருந்துள்ளது என வரலாறுகள் தெரிவிக்கிறது.

இந்த படுபயங்கர செயலுக்குப் பின்னால், தீங்கான சில நம்பிக்கைகளே இருந்திருக்க வேண்டும்.

இக்காலமரணங்கள் மட்டுமல்ல, கொத்தான மரணங்கள் எக்காலத்தில் நடந்திருந்தாலும் அதை இப்போது அறியும் போதும் நம் மனம் பதறுகிறது.

இதற்கு காரணம், தோன்றிய காலம் முதலே இந்த மனிதகுலத்திற்கு ரத்த ஓட்டம் போல ஒரு தொடர்பு இருப்பது தான்.




ஆயிரக்கணக்கில் குழந்தைகள் நரபலி: ’நடுச்சாம பயங்கர குகை’ மர்மம்.... Reviewed by Author on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.