அண்மைய செய்திகள்

recent
-

சுன்னாகத்தில் புகையிரதம் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

யாழ்ப்பாணம் சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) முதியவர் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் சுன்னாகம் ஆலடி பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சின்னராசா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதற்கு முன்னரும் இதுபோன்று தற்கொலைக்கு முயற்சித்த போது பொதுமக்களால் காப்பற்றப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுன்னாகத்தில் புகையிரதம் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை Reviewed by NEWMANNAR on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.