அண்மைய செய்திகள்

recent
-

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச சபையினால் சிரமதானப்பணி முன்னெடுப்பு.(படம்)


உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நினைவூட்டல் நிகழ்ச்சிகள் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் புதன் கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சூழல் பாதுகாப்பினை வெளிப்படுத்தும் பதாதைகள் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டதோடு ஆண்டாங்குளம் சந்தியிலிருந்து சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த சிரமதானத்தில் ஆட்காட்டிவெளி பங்கு மக்கள்,சமுர்த்தி பயனாளிகள் மன்-ஆண்டாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆட்காட்டிவெளிப் பங்குத்தந்தை அருட்பணி டெஸ்மன் ஆஞ்சலோ, ஆட்காட்டிவெளி கிராம அலுவலர் எஸ்.ஸ்ராலின்,மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர் திரு.நாவலன்,சமுர்த்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பிரதேசசபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 











உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச சபையினால் சிரமதானப்பணி முன்னெடுப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on June 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.