மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்! வட மாகாண சபை புறக்கணிப்பு....
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக விரிவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் செயலணி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை வடமாகாணத்தில் உள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றக் கிராமங்களையும், திருகோணமலை மாவட்டத்தில் அச்சுறுத்ததலை ஏற்படுத்தியுள்ள எல்லைக் கிராமங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்த மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய நான்கு அமைச்சர்கள் இணைத்தலைவர்களாக பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்ற செயலணி விரிவாக்கம்! வட மாகாண சபை புறக்கணிப்பு....
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment