இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம்
இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்றிலிருந்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நாட்டின் கால நிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப் பட்டுள்ளது.
இன்று தொடக்கம் காலநிலையில் மாற்றம்
Reviewed by NEWMANNAR
on
July 14, 2016
Rating:

No comments:
Post a Comment