அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாகன விபத்து! இருவர் பலி,,,,,


மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலுப்பைக்கடவை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக வாகனம் ஒன்றுடன், கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் ரக வாகனம் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை உள்ளிட்ட மூவர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் வாகன விபத்து! இருவர் பலி,,,,, Reviewed by Author on August 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.